×

வடசேரி பஸ் நிலையத்தில் வெடி சத்தம்

நாகர்கோவில், ஏப். 26:  கோடை விடுமுறை காலம் என்பதால் குமரி சுற்றுலாத்தலங்களுக்கும், ஆன்மிகத்தலங்களுக்கும்  கேரளம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவ்வாறு ரயில் மற்றும் பஸ்களில் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் முக்கிய மையமாக உள்ளது. இதனால் விடுமுறை நாட்களில் இங்கு கூட்டம் அலைமோதும். நேற்று காலை பஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. அப்போது 2வது பிளாட்பாரத்தில் நாகர்கோவிலில் இருந்து திசையன்விளை வழியாக திருச்செந்தூர் செல்லும் பஸ் ஒன்று நின்றது. திடீரென அந்த பஸ்சின் அடிப்பகுதியில்  பயங்கர வெடி சத்தம் கேட்டது.

இதனால்அதிர்ச்சியடைந்த பயணிகள் ஏதோ வெடிகுண்டு வெடித்து விட்டது என நினைத்துக்கொண்டு அங்கும் இங்கும்  ஓடினர். இந்த சத்தம் பஸ் நிலைய நுழைவு வாயிலில் உள்ள புறக்காவல் நிலையத்தில் இருந்த போலீசாருக்கும், கட்டுப்பாட்டு அறையில் இருந்த அதிகாரிகளுக்கும் கேட்டது. அதிர்ச்சியடைந்த அவர்கள் விரைந்து வந்து பஸ் அருகில் சென்று சோதனையிட்டனர். அப்போதுதான் பஸ் டயர் வெடித்த சத்தம் என தெரியவந்தது. இதனால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

Tags : Explosion ,bus stand ,Vadasseri ,
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை