×

தேசிய நீச்சல் போட்டிக்கு சிவகங்கை மாணவிகள் தேர்வு

சிவகங்கை, ஏப். 25: கடலூர் மாவட்டம் நெய்வேலியில் சென்னை மண்டல அளவிலான கேந்திரியா வித்யாலயா பள்ளி மாணவ மாணவிகளுக்கான நீச்சல் போட்டிகள் 2 நாட்கள் நடந்தது. இப்போட்டியில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இருந்து 7 மாணவிகளும், 4 மாணவர்களும் கலந்துகொண்டனர். இதில் தனி நபர் பிரிவில் இப்பள்ளி மாணவர்கள் ரிஸி, கங்கேஸ்லிங்கம், மலர்மன்னன், சிவராமன் ஆகியோர் பல்வேறு பிரிவுகளில் பதக்கங்களை வென்றனர். மாணவிகள் நேத்ரா, சண்முகப்ரியா, ஷரிகா ஆகியோர் தனி நபர் பிரிவில் வெற்றி பெற்று ஜுன் மாதம் டெல்லியில் நடைபெறும் தேசிய போட்டிக்கு தேர்வு பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பயிற்சியாளர் பால்பாண்டித்துரை, மாவட்ட நீச்சல் கழக தலைவர் ஜெயதாஸ்முனியாண்டி மற்றும் நிர்வாகிகள் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பாராட்டினர்.

Tags : Sivaganga ,swimming competition ,
× RELATED 6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த...