×

கொடைக்கானலில் அன்னதானம்

கொடைக்கானல், ஏப். 25: கொடைக்கானல் ஏரிச்சாலையில் உள்ளது சாய் சுருதி ஆசிரமம். இங்கு புட்டர்பத்தி சாய்பாபா 8ம் ஆண்டு நினைவு நாளையொட்டி மகா ஆராதனை நடைபெற்றது. முன்னதாக காலை 6 மணிக்கு ஓம்காரம், சுப்ரபாதம் நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து 21 ஓதுவார்கள் கலந்து கொண்டு வேதமந்திரங்களை முழங்கினர். பின்னர் நாராயண சேவை எனும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு கம்பளிகள், மழை கோர்ட்டுகள், சேலைகள், பாத்திரங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சத்தியசாயி சேவா சமீதியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ரமணி, முதல்வரின் முதன்மை செயலாளர் சாய்குமார், தேனி கலெக்டர் சாய்பல்லவி தேவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Annadhanam ,Kodaikanal ,
× RELATED இ-பாஸ் நடைமுறையால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்: வணிகர்கள்!