வேதாரண்யம், ஏப்.26: வேதாரண்யம் நகராட்சியில் உள்ள தாயுமானவர் உதவி நடுநிலைப் பள்ளியில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் சம்மந்தமான நோய்களுக்கு ஆலோசனை பெற்றனர். இதில் 96 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.