×

பெங்களூரு-தேசிய நெடுஞ்சாலையில் ஹைமாஸ் விளக்கு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

தர்மபுரி, ஏப்.26: மல்லிக்குட்டை பிரிவில் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஹைமாஸ் விளக்கு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், மல்லிக்குட்டை ஊருக்குள் செல்லும் சாலை சந்திப்பு வழியாக, நூற்றுக்கணக்கான வாகனங்கள் தர்மபுரி மார்க்கத்தில் இருந்து மல்லிக்குட்டை, மோதூர், புலிகரை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்கின்றன. ஆனால், மல்லிக்குட்டை பிரிவு சாலையில் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை.

இதனால், தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயலும் வாகனங்கள் எதிரே வாகனங்கள் வருவது தெரியாமல், அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், மல்லிக்குட்டை பிரிவு சாலை  வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இங்குள்ள பள்ளி, கல்லூரிக்கு செல்லும் வாகனங்களும், இந்த பிரிவு சாலையை கடந்து தான் செல்ல வேண்டும். எனவே, விபத்துக்களை தவிர்க்க மல்லிக்குட்டை  பிரிவு சாலையில், ஹைமாஸ் விளக்கை அமைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Tags : Bangalore ,National Highway ,
× RELATED சென்னை – பெங்களூரு தேசிய...