×

வில்லியனூர் அருகே வீட்டின் அருகே நின்றிருந்த ஆசிரியையிடம் செயின் பறிப்பு

வில்லியனூர், ஏப். 25: வில்லியனூர் அருகே தனியார் பள்ளி ஆசிரியையிடம் செயின் பறித்த பைக் ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். வில்லியனூர் பைபாஸ் சாலை அருகில் உள்ள அன்னைநகர் பகுதியை சேர்ந்தவர் வெண்ணிலா (33). தனியார் பள்ளி ஆசிரியை. நேற்று முன்தினம் இரவு வில்லியனூர் பைபாசில் உள்ள பெட்ரோல் பங்க்கில் மொபட்டுக்கு பெட்ரோல் போட்டு விட்டு வீட்டுக்கு சென்றார். வீட்டின் அருகே மொபட்டை நிறுத்தி விட்டு நின்றிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர், வெண்ணிலா கழுத்தில் அணிந்திருந்த ஒன்றேகால் சவரன் தங்க சங்கிலியை பறித்தார்.

பின்னர் அவர், அங்கு பைக்குடன் தயாராக நின்று கொண்டிருந்த ஆசாமியுடன் பைக்கில் ஏறி மின்னல் வேகத்தில் சென்று விட்டார். கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த வெண்ணிலா கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் செயின் பறிப்பு ஆசாமிகளை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் அவர்கள் வேகமாக சென்று விட்டனர். இதுகுறித்து வெண்ணிலா அளித்த புகாரின்பேரில், வில்லியனூர் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிந்து பைக்கில் தப்பிய வழிப்பறி ஆசாமிகளை தேடி வருகிறார்.

Tags : teacher ,villain ,Villianur ,
× RELATED கல்லூரி மாணவர்களின் வாக்காளர்...