×

பண்ருட்டி அருகே பரபரப்பு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீர் முற்றுகை

பண்ருட்டி, ஏப். 25: பண்ருட்டி அருகே சாத்திப்பட்டு கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தனர். ஆனால் இதுநாள் வரை எவ்வித பலனும் ஏற்படவில்லை. இதன் காரணமாக நேற்று கடையை மூடகோரி பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்த காடாம்புலியூர் போலீசார் சம்பவ இடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பிரச்னைக்குரிய கடையை அகற்றுவது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர், தாசில்தார் ஆகியோரிடம் நேரில் சென்று மனு வழங்க வேண்டும் என போலீசார் அறிவுரை வழங்கினர். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : blockade ,public ,shop ,Panrutti ,Tasmag ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...