×

வீடு புகுந்து நகை திருட்டு

உடுமலை,ஏப்.25: உடுமலையில் வீடு புகுந்து திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். உடுமலை செல்லமுத்து வீதியை சேர்ந்தவர் அபுதாகீர். பூட்டுச்சாவி கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி 10ம் தேதி தனது தாயாருக்கு உடல் நலம் சரி இல்லாததால் வீட்டை பூட்டி விட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். மறுநாள் காலை வீடு திரும்பிய போது,வீட்டின் வீட்டு கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்றுபார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த நாலே முக்கால் பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது. தெரிய வந்தது. விசாரணையில் பக்கத்து வீட்டை சேர்ந்த நாகராஜ் என்பவர் அபுதாகீர் வீட்டில் திருடியது தெரிய வந்தது.  இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, முதலில் நகையை திருப்பி தருவதாக கூறி உள்ளார். இந்நிலையில் தற்போது திருடிய நகைகளை தர முடியாது எனக் கூறியதோடு வீட்டை விட்டு தலைமறைவானார். இதுகுறித்து அபுதாகீர் அளித்த புகாரின் பேரில் உடுமலை போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான நாகராஜை தேடி வருகின்றனர்.

Tags : House ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்