×

தாராபுரத்தில் இடி, மின்னலுடன் கனமழை

தாராபுரம்,ஏப்.25:  திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் கடந்த 4 நாட்களாக பலத்த காற்று,இடி,மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் கடந்த நான்கு நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. காலை முதல் மாலை வரை வெயில் நீடித்த போதும், மாலை 5 மணிக்கு மேல் வானம் இருண்டு, கருமேகங்கள் சூழ கோடை மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இடி,மின்னலுடன் சூறாவளிகாற்றுடன் கனமழை பெய்தது. மழை காரணமாக சாலைகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கோடை மழையின் போது வீசிய சூறாவளிக்காற்றில் தாராபுரம்-பழனி நெடுஞ்சாலையில் உள்ள துலுக்கனூரில் அர்சுணன்(45) என்பவருக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் மறைப்புக்காக கட்டப்பட்டிருந்த படுதாக்கள் படபடவென அடித்தன.அதிர்ச்சியில் 30 நாட்கள் ஆன கோழிக்குஞ்சுகள் ஒன்றின் மீது ஒன்று மோதி,ஏறி குதித்து உயிரிழந்தன. இடி,மின்னல் மற்றும் மழையால் 100க்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகள் உயிரிழந்தன.மழை காரணமாக தாராபுரம் பகுதி வாழ் மக்கள் கோடை வெப்பம் தணிந்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுபோல் காய்கறி பயிரிட்டுள்ள விவசாயிகளும் இந்த மழை மிகுந்த பயன் அளிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Tags :
× RELATED வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி விற்றவர் உட்பட 3 பேர் கைது