×

திருச்செந்தூரில் வாலிபர் தற்கொலை

திருச்செந்தூர், ஏப்.25: திருச்செந்தூரில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்செந்தூர் தோப்பூரைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் சுடலை என்ற தேவேந்திரன்(26). இவர் பெயிண்டிங் வேலை பார்த்து வந்தார். தேவேந்திரனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. நேற்று முன்தினம் குடித்துவிட்டு தங்கையிடம் தகராறு செய்துள்ளார். இதை அவரது தாய் கண்டித்தார். இதனால் மனமுடைந்த தேவேந்திரன் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருக்கோயில் இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Tiruchendur ,
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...