×

ஏர்வாடியில் மழை மக்கள் மகிழ்ச்சி

ஏர்வாடி, ஏப். 25: ஏர்வாடியில் கடந்த ஒரு மாதமாக 100 டிகிரிக்கும் குறையாமல் வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க தர்பூசணி உள்ளிட்ட பழங்கள், குளிர்பானங்கள் விற்பனை களைகட்டின. கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்தாலும், ஏர்வாடியில் மழை போக்குகாட்டி வந்தது. இந்நிலையில் நேற்று காலையிலும் வெயில் தகித்த நிலையில், மாலையில் திடீரென திரண்ட மேக கூட்டங்கள் மழை பொழிந்தன. சுமார் அரை மணி நேரம் மழையை கொட்டித் தீர்த்தன. இந்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.  

Tags :
× RELATED மாவடியில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு