×

அரும்பாக்கத்தில் ரவுடி கொலையில் மேலும் 2 பேர் கைது

அண்ணாநகர்: சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (32) பிரபல ரவுடி. இவர் மீது ஏராளமான வழக்குகள் இருந்தன. கடந்த ஜனவரி மாதம் 21ம் தேதி கொலை வழக்கு ஒன்றில் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வந்தபோது ஆட்டோவில் வந்த 9 பேர் கும்பல் குமரேசனை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது. இதுதொடர்பாக அண்ணாநகர் உதவி ஆணையர் குனசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இன்ஸ்பெக்டர்கள் சங்கர், முத்துகுமார், எஸ்.ஐ. பச்சமுத்து ஆகியோர் விசாரித்து வந்தனர். இதில் முன்விரோதம் காரணமாக குமரேசனின் நண்பரான ரவுடி சகாயத்தின் கூட்டளிகள் அவரை கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் குமரேசன் கொலையில் தொடர்புடைய தேவராஜ் (33), காது ஸ்ரீதர் (25), டோரி கார்த்திக் (34), தினேஷ் குமார்(29), ஆடு ஸ்ரீதர் (27), விஜயகுமார் (19) ஆகிய 6 பேரை கைது செய்து சிறையிலடைத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஸ்கைவாக் மேம்பாலம் அருகே அரும்பாக்கம் போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வந்த இருவரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குபின் பதில் அளித்தனர். அவர்களை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ரவுடி குமேரசன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த புதுப்பேட்டையை சேர்ந்த வினோத்குமார் (எ) பாம்பு வினோத் (29), மாதவரத்தை சேர்ந்த பாக்கியராஜ் (39) என தெரியவந்தது. இதில், பாம்பு வினோத் மீது சேத்துப்பட்டு, சூளைமேடு காவல்நிலையங்களில் கொலை முயறிச்சி வழக்கும், பாக்கியராஜ் மீது கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் கொலை வழக்கு மற்றும் பெரம்பூர் திருவிக நகர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Tags : Rauti ,murder ,Arumbakkam ,
× RELATED ஆன்லைன் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ2.50...