×

துறையூர் அருகே தடுப்புச்சுவரில்லாத தரைமட்ட கிணறு மரண பீதியில் வாகன ஓட்டிகள்

துறையூர், ஏப்.25:  துறையூர் அருகே தடுப்பு சுவரின்றி ஆபத்தான நிலையிலுள்ள தரைமட்ட கிணற்றால் வாகனஓட்டிகள் அச்சமடைந்து வருகின்றனர்.
 துறையூரை அடுத்த சிங்களாந்தபுரம் ஊராட்சியில் உள்ள வடக்கு குட்டை உள்ளது. இதன் அருகே சிங்களாந்தபுரத்திலிருந்து துறையூர் செல்லும் சாலையில் பெரியசாமி என்பவரின் தரைமட்ட கிணறு உள்ளது. இந்த கிணறு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த கிணற்றின் பக்கவாட்டில் தடுப்பு சுவர் அமைத்து இடிந்து கிணற்றின் உள்ளே விழுந்துவிட்டது.

தற்போது மண் அரிக்கப்பட்டு சாலை சிறிதாக உள்ளது. இந்த சாலை வழியாக மினி பேருந்து மற்றும் பள்ளி வாகனங்கள் இருசக்கர வாகனத்தில் அதிகமாக இந்த சாலையில் சென்று வருகின்றனர். இதனால் அச்சப்பட்ட பெரியசாமி விபத்து ஏதும்  ஏற்படாமல் இருக்க ஊராட்சி நிர்வாகத்திற்கு மனுக்கள் பலமுறை அளித்தும் கண்டுகொள்ளாமல் உள்ளது. பொதுமக்களும் கிராம சபையில் மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கலெக்டர் இந்த தரைமட்ட கிணறுக்கு உடனடியாக தடுப்பு சுவர் அமைக்க ஏற்பாடு செய்து தரவேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Vehicle drivers ,mortar scare ,Thuraiyur ,
× RELATED நாமக்கல்லில் வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்