திருச்சி, ஏப். 24: தேசிய மக்கள் பேரியக்க நிறுவன தலைவர் நன்னிலம் செல்வா திருச்சியில் இன்று அளித்த பேட்டி: திருச்சி கே.கே.நகர் குறிஞ்சி நகரை சேர்ந்த நந்திஷா (எ) நந்தகுமார் அனுபூதி சமாஜம் நடத்தி வருகிறார். அவர் என்னை தொடர்பு கொண்டு, மக்களுக்கு பல நன்மைகள் செய்ய உள்ளேன். அதன்படி மாவட்டத்துக்கு ஒரு தலைமை தூதுவர், சட்டமன்ற தொகுதிகளுக்கு 7 தூதுவர்கள், 100 தொண்டர்கள் சேர்க்க கூறினார். அதன்படி செய்தேன். அப்போது, மாவட்ட தூதுவர்களிடம் தலா ₹1 லட்சம் என ₹32 லட்சம் வசூலித்தார். என்னிடம் ₹5 லட்சம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டார் என்றார்.