×

மீண்டும் படகு சவாரி தொடங்கப்படுமா? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

திருவாரூர் கமலாலய குளத்தில்
திருவாரூர், ஏப்.25:  திருவாரூரில் பழுதான படகினை சரி செய்து  கமலாலயக் குளத்தில் மீண்டும் படகு சவாரியை துவக்க வேண்டும். துவக்கிட வேண்டும் என கோயில் நிர்வாகத்திற்கு பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக தியாகராஜசுவாமி கோயில் இருந்து வருகிறது. சைவசமய தலங்களில் முதன்மையான தலமாக உள்ளது. இக்கோயில் 5 வேலி நிலப்பரப்பினை கொண்டது. திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஆழித்தேரும், கமலாலய குளமும் உள்ளது. கோயிலின் முக்கிய விழாக்களில் ஒன்றான ஆழி தேரோட்டத்திற்கு பின்னர் இந்த கமலாலய குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். கோயிலைப் போன்றே 5 வேலி பரப்பளவினை கொண்ட கமலாலய குளத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் படகு சவாரி போக்குவரத்து முந்தைய திமுக ஆட்சிக் காலத்தின்போது துவங்கப்பட்டது.

இதனையடுத்து ஆயில் இன்ஜின் பொருத்தப்பட்ட படகு ஒன்றும், காலால் சுற்றி செல்லும் பெடலிங் படகு ஒன்றும்  என 2 படகுகள் மூலம் நகரில் உள்ள பொது மக்கள், சிறுவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என அனைவரும் இந்த குளத்தை சுற்றி பார்த்து வந்தனர். இந்நிலையில் இந்த படகின் இன்ஜினில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக  கடந்த ஓராண்டிற்கும் மேலாக இந்த படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதேபோல் பெடலிங் படகு என்பதும் பழுதானதால் ஓரங்கட்டப்பட்டது. இதன் காரணமாக இந்த குளத்தில் படகு சவாரி என்பது தடைபட்டுள்ளது. தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் நகரில் உள்ள பொதுமக்கள் மற்றும் சிறுவர்களை கவரும் வகையிலும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் உடனடியாக இந்த குளத்தில் படகு சவாரி துவங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கோயில் நிர்வாகத்திடம் கேட்டபோது, இன்ஜின் பழுது காரணமாக படகு சவாரி தடை பட்டுள்ளது, விரைவில் இன்ஜின் பழுது நீக்கப்பட்டு படகு சவாரிக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Tags : boat ride ,
× RELATED ஊட்டியில் கொட்டி தீர்த்த...