×

பெருங்களூர் பிடாரியம்மன் கோயிலில் பாலை எடுப்பு திருவிழா

கந்தர்வகோட்டை, ஏப். 25:  பெருங்களூர் பிடாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பெண்கள் பாலை எடுப்பில் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். கந்தர்வகோட்டை பெருங்களூர் பிடாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி பெண்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற குடங்களில் தென்னைப்பாளையுடன் அழகிய பூக்களால் அலங்கரித்து கும்பம் போல் பாலை எடுப்பு நடத்தினர். பெருங்களுர், காட்டுப்பட்டி, கம்மங்காடு, மூக்கம்பட்டி, சேவுகன்பட்டி, நெம்மேலிப்பட்டி ஆகிய கிராமங்களில் இருந்து பெண்கள் மற்றும் இளம்பெண்கள், சிறுமிகள் என ஊர்வலமாக பாலை எடுத்து வந்து அம்மனை வழிப்பட்டு சென்றனர். பாலை எடுப்பு திருவிழாவையொட்டி கந்தர்வகோட்டை இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் தலைமையில் ஆதனக்கோட்டை எஸ்ஐ கனகராஜ் மற்றும் 40 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : temple ,Bidariyamman ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள...