×

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்

ஜெயங்கொண்டம், ஏப்.25: ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவாமங்கலம் கிராமத்தில் பட்டதாரிகள் மற்றும் மாணவர்கள் நலச்சங்கம் சார்பில் பிளஸ்2 அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு சங்கத்தின் தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். செயலாளர் சின்னப்பா முன்னிலை வகித்தார். உடையார்பாளையம் மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன் விழாவில் கலந்துகொண்டு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற கிராமத்திலுள்ள மாணவர்களை பாராட்டி பரிசுகளை வழங்கினார். மற்றும் இலவச பாட வகுப்புகள் மூலம் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தேவாமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பழமலை, தலைமை ஆசிரியர் கோபிநாத் (பொ) மற்றும் ஆசிரியர்கள் முத்தமிழ்செல்வன், சம்பத்குமார் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இணை செயலாளர் முத்து வரவேற்றார். சங்கத்தின் பொருளாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

Tags :
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது