×

காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாற வாய்ப்பு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் கலெக்டர் எச்சரிக்கை

நாகை, ஏப். 25: காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாற வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாகை கலெக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: வங்காள விரிகுடா கடற்பகுதிக்கு அருகே தற்போது நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து  கடலில் சீற்றம் அதிகமாக காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இயற்கை சீற்றத்தின் போது பொது மக்களை பாதுகாப்பாக தங்க வைத்திட ஏதுவாக பல்நோக்கு பேரிடர் பாதுகாப்பு மையங்களையும், கால்நடைகளையும் பாபதுகாப்பாக தங்க வைத்திட முகாம்களையும் மரம் அறுக்கும் இயந்திரங்கள் மற்றும் ஜே.சி.பி. வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்த ஒரு இயற்கை சீற்றங்களையும் சமாளித்திட மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது எனவும், பொதுமக்களும் இயற்கை சீற்றங்களின் போது அவசர அவசியமிற்றி வீட்டை விட்டு வெளியே வருவதையும், வாகனங்களில் வெளியில் செல்வதையும் தவிர்த்திடவும், தங்களது கால்நடைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறையின் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பொதுமக்கள்
தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : Fishermen ,sea ,
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...