×

ரூ.2500ல் இருந்து ரூ.2200க்கு விற்பனை வெற்றிலை விலை குறைவால் விவசாயிகள் கவலை

கரூர், ஏப்.25: வெற்றிலை 100கவுளி கொண்ட ஒரு மூட்டை ரூ.2500ல் இருந்து ரூ.2,200க்கு குறைந்து விற்பனையாகிறது. வெற்றிலை விலை குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.  கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் மகாதானபுரம், மகிளிபட்டி, லாலாப்பேட்டை, திருக்காம்புலியூர், உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் வெற்றிலை சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதியில் விளையும் வெற்றிலைகள் கரூர் திருச்சி வெற்றிலை மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த வாரம் வெற்றிலை விற்பனை விலை சரிந்துள்ளது. 100கவுளி கொண்டஒரு மூட்டை வெற்றிலைவிலை ரூ.2500ல் இருந்து ரூ.2200 ஆக குறைந்துவிட்டது. மூட்டைக்கு ரூ.300 விலை குறைந்து விட்டதால் இழப்பு ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...