×

வாலாஜா அருகே சாலையில் வீசப்பட்ட 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வாலாஜா, ஏப்.25: வாலாஜாவில் நள்ளிரவு வருவாய் துறையினர் நடத்திய சோதனையில் வெளிமாநிலங்களுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. வாலாஜாவில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசியை கடத்துவதாக நேற்று முன்தினம் இரவு வருவாய்த்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்து. அதன்பேரில் தாசில்தார் பூமா தலைமையிலான அதிகாரிகள் வாலாஜா அருகே தேவதானம் பகுதியில் நள்ளிரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, தேசிய நெடுஞ்சாலை ஓராமாக அரிசி மூட்டைகள் கிடப்பதாக அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இதையடுத்து, அதிகாரிகள் அங்கு சென்று பார்த்தபோது 2 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிந்தது. மேலும், அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டதை அறிந்த கடத்தல்காரர்கள் சாலையின் ஓரம் வீசி சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து, 2 டன் அரிசியை பறிமுதல் செய்து வாலாஜாவில் உள்ள தமிழ்நாடு உணவு பொருள் மற்றும் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : road ,Valaja ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி