×

போச்சம்பள்ளி அருகே செல்போன் டவர் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு

போச்சம்பள்ளி, ஏப்.25: போச்சம்பள்ளி அருகே புலியூரில், செல்போன் டவர் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த புலியூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு தர்மபுரி-ஊத்தங்கரை சாலையில் பெட்ரோல் பங்க், தனியார் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவை உள்ளன. இந்நிலையில், பெட்ரோல் பங்க்கை ஒட்டியுள்ள நிலத்தில், தனியார் செல்போன் நிறுவன ஊழியர்கள் செல்போன் டவர் அமைக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.
இதையறிந்து அங்கு வந்த 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள், செல்போன் டவர் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், ‘இப்பகுதியில் தென்னை மரங்கள் மற்றும் கீற்றுக்கொட்டகைகள் அதிகம் உள்ளதால், அடிக்கடி தீ விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்நிலையில், செல்போன் டவர் அமைக்கப்பட்டால் கதிர் வீச்சின் காரணமாக பாதிப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும். எனவே, இங்கு செல்போன் டவரை அமைக்க விட மாட்டோம்,’ என்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பாரூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள்,  கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் செல்போன் டவர் அமைக்கும் பணியை, தற்காலிகமாக தடுத்து நிறுத்தினர். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags : cellphone tower ,Pochampalli ,
× RELATED தடுப்பூசி போட்ட 2வது நாளில் ஒன்றரை மாத குழந்தை சாவு