போச்சம்பள்ளி, ஏப்.25: போச்சம்பள்ளி அருகே கீழ்குப்பத்தை சேர்ந்தவர் முத்து(24). வேன் டிரைவரான இவர், தனது குடும்பத்துடன் வேலம்பட்டி பாரியூர் கிராமத்தில் வசித்து வந்தார். நேற்று தனது மனைவியை அழைத்துக்கொண்டு, டூவீலரில் கீழ்குப்பம் வந்தார். அங்கு நடைபெறும் மகளிர் கூட்டத்தில் அவரை பங்கேற்க சொல்லிவிட்டு, மீண்டும் போச்சம்பள்ளிக்கு சென்றார். அப்போது, போச்சம்பள்ளியில் இருந்து தர்மபுரி நோக்கி எதிரே வந்த தனியார் பஸ், டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் உடல் நசுங்கிய முத்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போச்சம்பள்ளி போலீசார், முத்துவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.