×

பூக்குழி இறங்கிய பக்தர்கள் மாணவர் கொலையில் நான்கு பேர் சரண்

ஆண்டிபட்டி, ஏப்.25:ஆண்டிபட்டி சீத்தாராம்தாஸ்நகரை சேர்ந்தவர் பாண்டியன் மகன் நாகேந்திர பிரசாந்த்(18). ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக் முதலாம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறைக்காக வந்தவர் நண்பர்களுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சினிமா பார்ப்பதற்காக சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு பின்புறத்தில் விவசாய நிலங்களுக்கு செல்லும் வழியில் பலத்த காயத்துடன் பிரசாந்த் இறந்துகிடந்தார். ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் ஆண்டிபட்டியை சேர்ந்த அன்பு என்ற சிவகுமார் மகன் கண்ணன் (21), பாண்டி மகன் பாலாஜி (19),  அர்ச்சுனன் மகன் நவநீத கண்ணன் (21) ஆகியோர் போலீசில் சரணடைந்தனர். இவர்களை விசாரணை செய்து ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் சரணடைந்த 17 வயது சிறுவனை தேனியில் உள்ள இளஞ்சிறார் நீதி குழுமத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Tags : pilgrims ,Fowler ,murder ,
× RELATED புதுச்சேரியில் பிரபல தாதாவாக வலம்...