×

ஜல்லிகள் பெயர்ந்து கிடக்கும் சாலை

ரிஷிவந்தியம், ஏப். 24:  ரிஷிவந்தியம் அடுத்த பிரிவிடையாம்பட்டு கிராமத்தில் சுமார் மூவாயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பேருந்து நிறுத்தம் பகுதியில் இருந்து குடியிருப்பு
களுக்கு செல்லும் சாலை சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த தார்சாலை கடந்த 7 வருடத்திற்கு முன்பு போடப்பட்டது. இதனை இப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் தார்சாலை ஜல்லிகள் பெயர்ந்து மண் சாலையாக மாறியுள்ளது. மேலும் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...