×

திருவக்கரை அருகே விஷ ஊசி போட்டு நர்ஸ் தற்கொலை

வானூர், ஏப். 24: திருவக்கரை அருகே தனியார் மருத்துவமனை செவிலியர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா திருவக்கரை அருகே அம்புழுக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் சரண்யா (23). இவர் புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். வழக்கம்போல் பணிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். இரவில் சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கினார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதையறிந்த அவரது பெற்றோர் சரண்யாவை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிகிறது. இதுபற்றி வானூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விஷ ஊசி போட்டு செவிலியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Nurse suicide ,Thiruvakarai ,
× RELATED திருவக்கரை கோயிலில் அமாவாசை ஜோதி தரிசனம்