×

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் மகாசக்தி வேடம் அணிந்து திருநங்கை வேட்புமனு தாக்கல்

திருப்பரங்குன்றம், ஏப். 24: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான இரண்டாம் நாள் வேட்புமனு தாக்கல் நேற்று காலை 11 மணிக்கு துவங்கியது. நேற்று செவ்வாய் கிழமை என்பதால் முக்கிய அரசியல் கட்சியினர் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் திருநங்கை பாரதி கண்ணம்மா, அனைத்து மக்கள் புரட்சி கட்சியை சேர்ந்த கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தை சேர்ந்த செந்தில்ராஜா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். திருநங்கை பாரதி கண்ணம்மா, மகாசக்தி வேடம் அணிந்தும், உடன் முன்மொழிய வந்தவர்களில் ஒருவர் கிறிஸ்தவ வேடம் அணிந்தும், மற்றொருவர் இஸ்லாமிய உடையணிந்தும் வந்திருந்தனர். நேற்று மாலை 3 மணி நிலவரப்படி இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரை 43 வேட்புமனுகள் வழங்கப்பட்டுள்ளது. பிரதான கட்சிகள் நாளை முதல் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Tiruparankundam ,Maha Sakthi ,by-election ,Transgender ,
× RELATED அதிமுகவின் முதல் எம்.பி.யான மாயத்தேவர் உடல் நலக்குறைவால் காலமானார்