×

கடற்கரையில் பெண் சடலம்

புதுச்சேரி, ஏப். 24:  வில்லியனூர் அடுத்த பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் ஜோதி (48). கணவரை இழந்த இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஜோதி, குழந்தைகளை விட்டு பிரிந்து வீராம்பட்டினம் கடற்கரை ஒட்டியுள்ள பகுதி ஷெட்டில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார்.
 சம்பவத்தன்று வீராம்பட்டினம் கடற்கரையில் ஜோதி பிணமாக கிடந்தார். அவர் மதுகுடித்ததால் இறந்தாரா அல்லது வேறு காரணமா என்பது தெரியவில்லை. இதுபற்றி அப்பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் அரியாங்குப்பம் போலீசில் முறையிட்டார். இதையடுத்து ஜோதியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : beach ,
× RELATED ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் பாட்டிலால் குத்தி வாலிபர் கொலை