அரவக்குறிச்சி, ஏப்.24: அரவக்குறிச்சி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்குகியது. அரவக்குறிச்சி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இதுவரை முதல் நாள் ஒருவரும் நேற்று 2 ம் நாள் 2 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நேற்று வரை 3 சுயேட்சைகள் தாக்கல் செய்துள்ளனர். நேற்று தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் நாகமரை புதூரை சேர்ந்த அக்னி ஸ்ரீ ராமச்சந்திரன் (38) என்பவரும். கரூர் வேலாயுதம்பாளையத்தில் வசித்து வரும் அருந்தமிழர் குடியரசு கட்சிபொதுச்செயலாளர் தலித் பாண்டியன்(43) என்பவரும் தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.