×

திமுக வேட்பாளர் வெற்றிக்கு பாடுபட வேண்டும் விசிக கூட்டத்தில் முடிவு

அரவக்குறிச்சி, ஏப்.24: அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆலோசனை கூட்டம் பள்ளபட்டியில் நடைபெற்றது.கூட்டத்திற்கு அரவக்குறிச்சி தொகுதி செயலாளர் ரிபாய்தீன் ஹசனி தலைமை  வகித்தார். கரூர் மேற்கு மாவட்ட செயலாளர்  ஜெயராமன் முன்னிலை வகித்தார். இதில் விடுதலை சிறுத்தை கட்சியின் அரவக்குறிச்சி சட்டமன்றத் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டது. திமுக வேட்பாளர் வெற்றிக்காக பாடுபடுவது,அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர்   செந்தில் பாலாஜியை  சுமார் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  சிறப்பாக பணியாற்றுவது,அரவக்குறிச்சி சட்டமன்றத் தேர்தல் பணிக்குழு மாவட்ட செயலாளர் சதீஸ் என்ற நிலவன் உள்பட நிர்வாகிகளை  கொண்டு நியமனம்  செய்யப்பட்டது.  தேர்தல் பணிக்குழுவோடு ஒத்துழைத்து கூட்டணி  கட்சி  வேட்பாளர் செந்தில் பாலாஜியை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



Tags : candidate ,DMK ,
× RELATED வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த...