×

பெரியமணலியில் இந்திய கம்யூ. கூட்டம்

திருச்செங்கோடு, ஏப்.23:  எலச்சிபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியமணலியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, கிளை பொறுப்பாளர் சிவகுமார் தலைமை வகித்தார். எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் அன்புமணி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் கிருஷ்ணசாமி, ராமகிருஷ்ணன் மற்றும் மாவட்ட செயலாளர் குழந்தான், மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் மணிவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில், பெரியமணலி பகுதியை சேர்ந்த தொழிலாளர்களுக்கு, அரசின் இலவச வீட்டுமனை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேரவை சார்பில் வலியுறுத்தப்பட்டது. இக்கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டரை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது.

Tags : Indian Commune ,Big Manali Meeting ,
× RELATED கந்தர்வகோட்டையில் இந்திய கம்யூ.,கட்சி அலுவலகம் திறப்பு