×

முன்விரோத தகராறில் பெண்ணை தாக்கிய 2 பேர் கைது

தா.பழூர், ஏப். 23: தா.பழூர் அருகே முன்விரோத தகராறில் பெண்ணை தாக்கிய 2 பேர் கைது செய்யபட்டனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தேவாமங்கலத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி ராஜகுமாரி (59). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கொஞ்சி (38) என்பவருக்கும் இடப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் ராஜகுமாரி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த கொளஞ்சி, அவரது மனைவி கவிதா (30), மணிமேகலை (55) ஆகியோர் ராஜகுமாரியை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து தா.பழூர் போலீஸ் நிலையத்தில் ராஜகுமாரி புகார் செய்தார். அதன்பேரில் சப்இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார், 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தார். இதைதொடர்ந்து கொளஞ்சி மனைவி கவிதா, கொளஞ்சியின் தாய் மணிமேகலை ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பியோடிய கொளஞ்சியை தேடி வருகின்றனர்.



Tags : dispute ,
× RELATED கொடுங்கையூர் டாஸ்மாக் கடையில் தகராறு...