கரூர், ஏப். 23: வெண்ணைமலை பகுதியில் இருந்து கோதூர் செல்லும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர்.கரூர் மாவட்டம் வெண்ணைமலை பகுதியில் இருந்து சேலம் ரயில்வே டிராக் அருகே கோதூர், சின்னகோதூர் மற்றும் சேலம் பைபாஸ் சாலை ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கான சாலை உள்ளது. இந்த சாலையில் இருபுறமும் ஏராளமான தனியார் நிறுவனங்களும், குடியிருப்புகளும் உள்ளன. இதனால்இந்த சாலையில் வாகன ஓட்டிகள் அதிக அளவில் சென்று வருகின்றனர். சாலையின் குறிப்பிட்ட தூரம் வரையிலான சாலை மேடும், பள்ளமுமாகவும், மண்சாலையாகவே உள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி வாகனஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.இந்த சாலையை தரம் உயர்த்தி தர வேண்டும் என இந்த பகுதியினர் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுநாள் வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியாவது இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.