×

ஊக்க ஊதிய உயர்வு வழங்க கோரி தரகம்பட்டியில் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கடவூர், ஏப்.23: தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் உள்ளிருப்புப் போராட்டம் தரகம்பட்டியில் நடந்தது. உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் நடந்த இந்த போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஜெயராஜ் தலைமை வகித்தார். இதில் ஒரு கல்வி ஆண்டில் இரு வேறு பட்டங்கள் பெற்றால் அந்த ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கலாம் என அரசாணை உள்ளது. இதற்கு முன் இந்த ஆணையைப் பின்பற்றி ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது கடவூர் ஒன்றியத்தில் 8 பேருக்கு இருவேறு பட்டங்கள் பெற்றவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஆனால் ஒரு நபருக்கு மட்டுமே வழங்கி விட்டு மற்ற  7 பேருக்கு  ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்க நிர்வாகிகள் உள்ளிருப்புப் போராட்டம் செய்தனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவில்லை என்றால் குடும்பத்துடன் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் செல்வம், டேனியல் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.


Tags : Teachers ,Tarakampatti ,
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...