×

திருச்செந்தூரில் மணல் லாரி மோதி தொழிலாளி படுகாயம்

திருச்செந்தூர், ஏப். 23: திருச்செந்தூரில் மணல் லாரி மோதி கூலி தொழிலாளி படுகாயமடைந்தார். திருச்செந்தூர் அருகே உள்ள அம்மன்புரம் திருவள்ளுவர்நகர் சுப்பையா மகன் காளிமுத்து(33). கூலி தொழிலாளி. இவ
ருக்கு மனைவிமற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் காளிமுத்து திருச்செந்தூர் அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் பைக்கில் மெதுவாக சென்றுகொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மணல் லாரி பைக்கை இடித்து தள்ளியது. இதில் கீழே விழுந்த காளிமுத்து மீது லாரியின் டயர்கள் ஏறியது. இதில் இருகால்களும் நசுங்கின. அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு ஒரு காலை எடுக்க வேண்டியதாகி விட்டது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து திருச்செந்தூர் எஸ்ஐ சத்தியவேந்தன் விசாரணை நடத்தி லாரியை ஓட்டி வந்த கமுதி அருகே உள்ள கேஎம் கோட்டை ஆர்சி நடுத்தெரு பால்ராஜ் மகன் குமார் என்பவரை கைது செ

Tags : Sand lorry collision worker ,Tiruchendur ,
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...