×

வீரகனூர் பகுதியில் வியாபாரியிடம் வழிப்பறி 2 வாலிபர்கள் கைது

மேச்சேரி, ஏப்.22: நங்கவள்ளி அருகே வனவாசி பகுதியைச் சேர்ந்தவர் ஹரிராமன். மாங்காய் வியாபாரியான இவர், நேற்று முன்தினம், தனது காரில் மாங்காய் லோடு ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரிக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது, நங்கவள்ளியில் 2 பேர் வழிமறித்து, ஹரிராமன் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ₹2 ஆயிரம் பணத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து, வழிப்பறியில் ஈடுபட்ட நங்கவள்ளி தோப்பு தெருவைச் சேர்ந்த சீரங்கன் மகன் மணிகண்டன்(28), தங்கராஜ் மகன் விஜயகுமார்(34) ஆகியோரை கைது செய்தனர்.

Tags : men ,area ,Veeraganur ,
× RELATED ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட் கார்சியா சுட்டுக்கொலை!