×

பணம் இரட்டிப்பு மோசடி செய்தவர் மீது வழக்கு

பெரியகுளம், ஏப்.22:  விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்தி நகர் சேர்ந்தவர் அம்பலம்(63). இவர் விருதுநகர் மாவட்டத்தில் அரசு போக்குவரத்துக்கழக நடத்துநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு கொடைக்கானல் சேர்ந்த சூசை மற்றும் மணிகண்டன் ஆகியோர் மூலமாக பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி நெடுஞ்செழியன் தெருவைச் சேர்ந்த சித்தார்த்தன் என்பவர் அறிமுகமானார்.அவரிடம் கொடுக்கும் பணத்தை இரு மடங்காக்கி தருவார் என்று கூறி சித்தார்த்தனிடம் அம்பலம் ரூ. 11 லட்சத்து 48 ஆயிரத்து 500ம், 9 பவுன் நகையும் கொடுத்துள்ளார். ஆனால், கொடுத்த பணத்தை தராமல் மோசடி செய்து ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பெரியகுளம் தென்கரை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags :
× RELATED கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால்...