×

பள்ளிவாசல் மீது கல்வீசியவர் கைது

பெரியகுளம், ஏப்.22:  பெரியகுளம் அருகே தாமரைக்குளம் முஜிபுர் ரகுமான் தெருவைச் சேர்ந்தவர் காதர்ஒலி சேட்(42). இவர் நேற்று முன்தினம் தாமரைக்குளம் முத்துஇருளப்பன் தெருவில் உள்ள பள்ளிவாசலில் தொழுகையில் இருந்துள்ளார். அப்போது பள்ளிவாசலின் மேற்கூரை மீது கல்விழும் சத்தம் கேட்டு காதர்ஒலி சோட் வெளியே வந்து பார்த்தார். அப்போது தாமரைக்குளம் கீழ பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த பூமிநாதன்(53) என்பவர் கையில் கல்லுடன் நின்று கொண்டிருந்துள்ளார். இதை தட்டிக் ேகட்ட காதர்ஒலி சேட்டிற்கு அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து காதர்ஒலி சேட் கொடுத்த புகாரின் பேரில், பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து பூமிநாதனை கைது செய்துள்ளனர்.

Tags :
× RELATED இடுக்கியில் இன்று பிரசாரம் நிறைவு