×

காளையார்கோவிலில் காட்சி பொருளாக ஹைமாஸ் விளக்கு

காளையார்கோவில், ஏப்.22: காளையார்கோவில் பஸ் நிலையத்தில் உள்ள ஹைமாஸ் விளக்கு அமைத்து சில வருடங்களே ஆன நிலையில், தற்போது எரியாத நிலையில் காட்சிப்பொருளாக உள்ளது. மதுரை-தொண்டி மாநில நெடுஞ்சாலை காளையார்கோவில் பஸ் நிலையம் அருகில் கடந்த சில வருடங்களுக்கு முன் புதிதாக அமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்கு பயன்பாட்டில் இருந்து வந்தது. தற்போது சில நாட்களாக எரியாமல் காட்சிப் பொருளாக உள்ளது. காளையார்கோவில் பஸ் நிலையம் சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையப்பகுதி என்பதால் பகல் மற்றும் இரவு நேரங்களில் உள்ளுர் மற்றும் வெளியூர் பயணிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

இந்நிலையில் பேருந்து நிலையத்தில் மின்விளக்கு பற்றாக்குறையை பூர்த்தி செய்ய ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட்டது. தற்போது அதுவும் சில மாதங்களாக பழுது ஏற்பட்டுள்ளதால் பஸ் நிலையம் இருள் சூழந்து காணப்படுகிறது. தற்போது இப்பகுதிகளில் திருட்டுச் சம்பவம் மற்றும் வழிப்பறி கொள்ளை போன்றவை அடிக்கடி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இந்நேரத்தில் பஸ் நிலையம் அருகில் உள்ள ஹைமாஸ் விளக்கு எரியாமல் இருப்பது உள்ளுர் மற்றும் வெளியூர் செல்லும் பயணிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் வசதிக்காக அமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்குக் காட்சிப் பொருளாகவே உள்ளது என்றும், இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

Tags : Himalayan ,
× RELATED பாஜகவின் இமலாய பொய்கள் சரிந்துவிட்டன: தேஜஸ்வி