×

மதுபோதையில் தகராறு முதியவர் குத்திக்கொலை

திருப்பரங்குன்றம், ஏப்.22:  மது போதையில் ஏற்பட்ட தகராறில் முதியவருக்கு பாட்டில் குத்து விழுந்தது. இதில் அவர் உயிரிழந்தார். திருப்பரங்குன்றம் அருகில் உள்ள திருவள்ளுவர் நகர் ஆதிதிராவிடர் காலனி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் முருகன்(53). பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த கொத்தனார் வேலை செய்யும் சுந்தரபாண்டி(27) என்பவரும் மது அருந்திவிட்டு திருவள்ளுவர் நகர் பேருந்து நிறுத்தம் அருகே தகாராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது ஆத்திரத்தில் சுந்தரபாண்டி அருகில் இருந்த பாட்டிலால் முருகனை வயிற்றில் குத்தியுள்ளார் இதில் ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்த முருகன் கீழே விழுந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தந்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் முருகனை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியில் முருகன் இறந்துவிடவே போலீசார் சுந்தரபாண்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
× RELATED உசிலம்பட்டி அருகே பள்ளத்தில் சரிந்த...