×

ரயிலில் அடிபட்டு மூதாட்டி உயிரிழப்பு

திருமங்கலம், ஏப்.22: .திருமங்கலம் காமராஜபுரத்தை சேர்ந்தவர் துரைபாண்டி. இவரது மனைவி பொன்னுத்தாய்(70). நேற்று காலை இவர் சேடபட்டி அருகேயுள்ள குப்பல்நத்தத்தில் நடந்த திருவிழாவிற்கு செல்ல திருமங்கலம் கூழையாபுரத்தில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு சென்ற அந்தியோதியா ரயில் மோதியது. இதில் உடல் நசுங்கி பொன்னுத்தாய் உயிரிழந்தார். மதுரை ரயில்வே போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags :
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளை தீவிரமாக...