×

டிப்பர் லாரி மோதி 3 வாலிபர்கள் பலி டிரைவருக்கு வலை

ஆலந்தூர், ஏப். 22: சென்னை மணப்பாக்கம் அடுத்த ராமாபுரத்தில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்ப்பவர்கள் கிருஷ்ணகிரியை சேர்ந்த மூர்த்தி (32), ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிவகுமார் (29), முரளி (29). நேற்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில், 3 பேரும் சொந்த ஊர் செல்வதற்காக மணப்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் அமர்ந்திருந்தனர். போரூர் நோக்கி வேகமாக சென்ற டிப்பர் லாரி, 3 பேர் மீது மோதியது. இதில் 3 பேரும், சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதை பார்த்ததும் லாரி டிரைவர் தப்பிவிட்டார். தகவலறிந்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலங்களை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags : youngsters ,
× RELATED புளியந்தோப்பு ஆடுதொட்டியில் இருந்து...