×

ஊத்துக்கோட்டையில் பால்குட ஊர்வலம்

ஊத்துக்கோட்டை, ஏப். 22: ஊத்துக்கோட்டை அங்காளம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று காலை பால், தயிர், பன்னீர், சந்தனம் மற்றும் இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கிராம தேவதைகளான செல்லியம்மன், எல்லையம்மன் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
இதையடுத்து நாகலம்மன் கோயிலில் இருந்து பால் குடம் ஏந்தி ஊர்வலமாக வந்த பெண்கள் அங்காளம்மன் கோயிலை வலம் வந்து அங்காளம்மனுக்கு பாலபிஷேகம் செய்தனர். இதில் கிராம பெரியவர்கள் திருத்தணி ரெட்டியார், கோதண்டன் உட்பட உள்பட கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

Tags : Milk procession ,
× RELATED தைப்பூசத்தையொட்டி பால்குட ஊர்வலம்