×

திருத்தணி சுதந்திராபள்ளி 100 சதவீத தேர்ச்சி

திருத்தணி,  ஏப் 22:  திருத்தணி சுதந்திரா மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் பிளஸ்2 அரசு பொதுத்தேர்வில் மொத்தம், 41 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில், 41 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 100 சதவீதம் ஆகும். இதில், 600 மதிப்பெண்களுக்கு, 560 மதிப்பெண்களுக்கு மேல், 4 பேர், 400 மதிப்பெண்களுக்கு மேல், 21   பேர், 375 மதிப்பெண்களுக்கு மேல், 16 பேர் என பெற்றிருந்தனர். திருத்தணி வட்டார அளவில், சுதந்திரா பள்ளி பிளஸ்2 அரசு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்துள்ளனர். இதற்கு காரணமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை, பள்ளி தாளாளர் சியாமளாரங்கநாதன், பள்ளி தலைவர் பேராசிரியர் ரங்கநாதன், முதல்வர் துரைகுப்பம் ஆகியோர் பாராட்டினர்.

Tags : Thiruthani Independent ,
× RELATED புதுப்பாளையம் ஆரணியாற்றில் ₹20...