×

சென்னை, கோவை, மதுரையில் ஜோயாலுக்காஸின் 3 முக்கிய ஷோரூம்கள் 24,25,26ல் திறப்பு நடிகை கஜோல், நடிகர் விஜய்சேதுபதி பங்கேற்பு

மதுரை, ஏப். 21: ஜோயாலுக்காஸின் 3 முக்கிய ஷோரூம்களை சென்னையில் நடிகை கஜோல், மதுரையில் நடிகர் விஜய்சேதுபதி திறந்து வைக்கின்றனர் என ஜோயாலுக்காஸின் சேர்மன் ஜோய் ஆலுக்காஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ‘‘தமிழகத்தில் ஜோயாலுக்காஸின் 3 முக்கிய ஷோரூம்கள் வரும் 24ம் தேதி சென்னை, தி.நகரிலும், மதுரையில் வரும் 25ம் தேதி, கோவையில் 26ம் தேதி திறக்கப்படுகிறது. சென்னை ஷோரூமை பாலிவுட் நடிகை கஜோல், மதுரை மற்றும் கோவையில் நடிகர் விஜய்சேதுபதி திறந்து வைக்கிறார். தமிழ்நாடு எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வாடிக்கையாளர்கள் அளித்து வரும் நல்லாதரவிற்கு எனது நன்றி. இதுவே மேலும் பல ஷோரூம்களை நாங்கள் விரிவுபடுத்த காரணமாக உள்ளது.பிரமிக்க வைக்கும் ஷாப்பிங் அனுபவம், சிறந்த சேவை, மக்கள் தங்கள் பணத்திற்கான சரியான மதிப்பை பெறுவது அனைத்தும் எங்களது ஷோரூமில் உறுதி செய்யப்படும். மேலும் 2020க்குள் உலகம் முழுவதும் ஜோயாலுக்காஸ் 200 ஷோரூம்கள் இருக்கும். அதற்கான விரிவாக்கப் பணிகளை திட்டமிட்டு வருகிறோம். புதிய ஷோரூமில் தங்கம், வெள்ளி, வைரம் உள்ளிட்ட அனைத்து வகை ஆபரணங்களிலும் புத்தம் புதிய கலெக்சன்களும், டிசைன்களும் அறிமுகப்படுத்தப்படுகிறது. திறப்பு விழா சலுகையாக ஒவ்வொரு விற்பனைக்கும் வீட்டு உபயோக பொருட்களின் நிச்சய பரிசு வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. நகைகளுக்கு ஆயுட்கால இலவச பராமரிப்பு, ஒரு வருட இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல சலுகைகள் ஷோரூமில் காத்திருக்கிறது’’, என்றார்.

Tags : Kajol ,Joyalukas ,Vijay Sethupathi ,Madurai ,Coimbatore ,
× RELATED விஜய் சேதுபதி படத்தில் மம்தா மோகன் தாஸ்