×

டூவீலர் மோதி முதியவர் பலி

வாடிப்பட்டி, ஏப். 21: வாடிப்பட்டி அருகே, ஆண்டிபட்டி பங்களா சின்னமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பழனி (70), நேற்று முன்தினம் அதிகாலை காப்பி சாப்பிடுவதற்காக வீட்டிலிருந்து பஸ்நிறுத்தம் சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கலில் இருந்து மதுரை சென்ற டூவீலர் ஒன்று பழனி மீது மோதியது. இந்த விபத்தில், பழனியின் இடதுகால் மற்றும் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இது குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Tuweiler ,
× RELATED மூன்றாம் நாளாக போராட்டம் குமுளி...