×

நின்ற வாகனம் திடீரென ஓடியது

கொடைக்கானல், ஏப். 21: கொடைக்கானல் நகரில் நின்றுகொண்டிருந்த வாகனம் திடீரென தறிகெட்டு ஓடியதில் தையல் கடை மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக பலர் உயிர் தப்பினர்.
வத்தலகுண்டு நகரைச் சேர்ந்தவர்அப்துல்லா . இவர் காய்கறி வியாபாரம்செய்து வருகிறார். இன்று பிற்பகல் 3 மணியளவில் மூஞ்சிக்கல் பகுதியில் அவருக்குச் சொந்தமான பிக்கப் வாகனத்தை நிறுத்திவிட்டு காய்கறிகளை இறக்கிக்கொண்டிருந்தார். அப்போது வாகனம் திடீரென நகன்று வேகம் பிடித்து அருகிலுள்ள மாயவன் என்பவரின் தையல் கடைக்குள் புகுந்தது. இதில் கடை சேதம் அடைந்ததுடன் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் சேதமடைந்தது. தையல் கடைக்காரர் கடைக்கு உள்ளே உட்கார்ந்து இருந்ததின் காரணமாக அவர் மயிரிழையில் உயிர் தப்பினார். அத்துடன் வாகனம் வேகமாக வந்ததைக்கண்ட பொதுமக்களும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் பலர் உயிர்தப்பினர். இது குறித்து தகவல் கிடைத்தவுடன் கொடைக்கானல் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED இன்று வாக்குச்சாவடிக்கு சென்று...