×

சர்க்கரை ஆலையில் மேற்கூரை உடைந்து தவறி விழுந்த ஊழியர் பலி

பாலக்கோடு, ஏப்.21: பாலக்கோடு சர்க்கரை ஆலையில் மேற்கூரை உடைந்து விழுந்ததில், சமையல் உதவியாளர் தவறி விழுந்து பலியானார். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில், சமையல் உதவியாளராக திம்பம்பட்டியைச் சேர்ந்த சுந்தரம்(40) என்பவர் பணி புரிந்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், மேகலா என்ற ஒரு மகளும் உள்ளனர். நேற்று காலை 9 மணிக்கு, வழக்கம் போல்  பணிக்கு சென்றார். அங்கு 2வது தளத்தில் உள்ள சமையலறை மேற்கூரையில், தேங்கியிருந்த மழைநீரை அப்புறப்படுத்த முயன்றார். இதில் திடீரென மேற்கூரை உடைந்து, தவறி கீழே விழுந்தார். அப்போது அங்கிருந்த மற்ற 2 ஊழியர்களும் காயமடைந்தனர். உடனடியாக 3 பேரையும் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுந்தரம் உயிரிழந்தார். இதுகுறித்து பாலக்ேகாடு எஸ்ஐ விஸ்வநாதன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags : sugar factory ,
× RELATED மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை...