×

துறையூர் பகுதியில் திடீர் மழை

துறையூர், ஏப்.21:  துறையூர் தாலுகாவில் கடந்த சில மாதமாக கடுமையான வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை  துறையூரில்  1 மணி நேரம் மழை பெய்தது. துறையூர் அதன் சுற்றுப்புற பகுதிகளான காளிப்பட்டி, அம்மாபட்டி, சிங்களாந்தபுரம், இதுபோல உப்புலியபுரம், கோட்டப்பாளையம் ஆகிய பகுதிகளில் வெப்பசலனம் காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags : area ,Thuraiyur ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...