×

வாக்களிக்க நீண்ட நேரம் காத்திருந்த பெண்கள்

மயிலாடுதுறை, ஏப்.19:  மயிலாடுதுறை மக்களவைத்தொகுதி, மயிலாடுதுறையில்இயந்திரக் கோளாறு காரணமாக 9 பூத்களில் வாக்குப்பதிவு 8 மணி வரைதொடங்கவில்லை. மயிலாடுதுறை தருமபுரம் வாக்குச்சாவடி, திருஇந்தளூர் வாக்குச்சாவடி, கஞ்சாநகரம், பட்டவர்த்தி,அன்னவாசல், திருவாலாங்காடு,பட்டவர்த்தி. மாதிரிமங்கலம், ஆகிய இடங்களில், இயந்திரக் கோளாறு காரணமாகவாக்குப்பதிவு இயந்திர கோளாறுகாரணமாக வாக்குப்பதிவு தாமதமானது. இதனால்,வாக்களிக்க காத்திருந்தவாக்காளர்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குப்பதிவு நேரத்தை அதிகரித்து தர கோரிக்கை வைத்தனர், ஆனால் மாலை 6 மணிக்குள் எத்தனை நபர் வந்தாலும் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அனைவரும் வாக்களித்தபிறகே வாக்கு மையங்கள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மயிலாடுதுறை மக்களவை தொகுதிக்குட்பட்ட மயிலாடுதுறை அறுபத்துமூவர்பேட்டையை சேர்ந்த 95 வயது மூதாட்டிசம்பூர்ணம் தனது தள்ளாத வயதிலும் ஜனநாயக கடமையை ஆற்ற தன் உறவினரின் துணையுடன் ஆட்டோவில் வந்து தன் வாக்கை பதிவு செய்தார்.

Tags : Women ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...