பெரும்புதூர், ஏப்.19: பெரும்புதூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட குன்றத்தூர் ஒன்றியம் மணிமங்கலம் ஊராட்சி வாக்குச்சாவடி எண் 256, 257ல் மொத்தம் 2500 வாக்குகள் உள்ளன. நேற்று காலை முதல் வாக்குகள் மந்தமாகவே பதிவாயின. மதியம் 12 மணிக்கு மேல் மக்கள் கூட்டம் அதிகரித்து, 2 வாக்குச்சாவடிகளிலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.அப்போது, வாக்குச்சாவடி மையத்துக்கு பறக்கும் படை மற்றும் துணை ராணுவத்தினர் வந்தனர். அவர்கள், கூட்டத்தை ஒழுங்குப்படுத்த லத்தியால் பொதுமக்களை தாக்கினர். இளைஞர் மற்றும் முதியர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதை கண்டித்து துணை ராணுவத்தினரை, பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து துணை ராணுவத்தினர் உடனே வேனில் ஏறினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அந்த வாகனத்தை மறித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து மணிமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பொதுமக்களிடம் சமரசம் பேசினர். பின்னர் துணை ராணவத்தினர் அங்கிருந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்
பட்டது.